Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 3,071 ஆக உயர்வு!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (10:37 IST)
இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த ஒமிக்ரான் பாதிப்புகள் 3,071 ஆக பதிவாகியுள்ளது. 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த ஒமிக்ரான் பாதிப்புகள் 3,071 ஆக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 876 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து டெல்லியில் 513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  
 
மேலும் தமிழ்நாட்டில் 121, குஜராத்தில் 204, கேரளாவில் 284, ராஜஸ்தானில் 291, தெலுங்கானாவில் 123 என தொற்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 1,203 பேர் ஒமிக்ரான் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து செய்வோம்: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்..!

எந்த தொகுதியில் ராஜினாமா..! ராகுல் காந்தி இன்று அறிவிப்பு.?

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

எச்சரிக்கைக்கு எந்த பயனும் இல்லை.. திருவொற்றியூரில் மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments