Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 15 முதல் முன்பதிவு தொடக்க்கமா? ஏர் இந்தியா விளக்கம்

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (08:04 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து ஒரு சில தனியார் விமான நிறுவனங்களும் இந்திய ரயில்வேயும் ஏப்ரல் 15 முதல் முன்பதிவை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
ஏற்கனவே இந்தியன் ரயில்வே ஏப்ரல் 15 முதல் தொலைதூர பயணங்களுக்கான முன்பதிவை தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 15 முதல் முன்பதிவை தொடங்க போவதில்லை என சற்றுமுன் அறிவித்துள்ளது
 
ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவையை தொடங்குவது குறித்து ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பின்னர் இந்திய அரசு கூறும் அறிவுரையை பொறுத்தே முன்பதிவை தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் ஏப்ரல் 15 முதல் ஒருசில தனியார் விமானங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கியிருப்பவர்கள் தனியார் விமான சேவையை பயன்படுத்த தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments