Webdunia - Bharat's app for daily news and videos

Install App

No IPL - முந்திக்கொண்ட டெல்லி அரசு: சிக்கலில் பிசிசிஐ!!

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (12:54 IST)
கொரோனா அச்சுறுத்தலால் டெல்லியில் ஐபிஎல் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம் 29 ஆம் தேதி துவங்கி மே 24 வரை நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை முழுவீச்சில் பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. 
 
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஐபிஎல் போட்டிகளை காண குவியும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் அது மிகப்பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடும் என ஐபில் போட்டியை ரத்து செய்யும்படி கோரப்பட்டிருந்தது. 
 
பிசிசிஐ இது குறித்து இன்னும் முடிவெடுக்காத நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் டெல்லியில் ஐபிஎல் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்படுகிறது என டெல்லி துணை முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் பிசிசிஐ விரைந்து முடிவு எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments