Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்பயா தாயாரின் 7 வருட சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது!

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (05:57 IST)
நிர்பயா தாயாரின் 7 வருட சட்டப்போராட்டம்
நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளான அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை நீதிமன்றத்தால்விதிக்கப்பட்டது. 
 
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க முக்கிய காரணம் நிர்பயாவின் அம்மா ஆஷா தேவி என்பவர் தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. 
 
இந்த வழக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து  7 வருடங்கள் மிக தீவிரமாக ஆஷா தேவி சட்ட போராட்டம் நடத்தி கடைசியில் இன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தன் செல்ல மகளை பலி கொடுத்த கையோடு புலம்பி கொண்டு மூலையில் இருக்காமல் ஆஷா தேவி தீவிரமான சட்ட போராட்டங்களை முன்னெடுத்தார். இந்த வழக்கு விசாரணையின் போதும் ஆஷா தேவி நீதிமன்றத்தில் ஆவேசமாக பேசினார்
 
மரணத்திற்கு முன் நிர்பயா கொடுத்த வாக்குமூலம் முதல் கடைசி நேரத்தில் நிர்பயா பட்ட கஷ்டங்கள் வரை அனைத்தையும் நீதிமன்றத்தில் ஆஷா தேவி பேசியதே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க ஒரு முக்கிய காரணம். இன்று நிர்பயாவின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும் என்றே ஆஷாதேவி உறுதியாக நம்பியிருப்பார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்