குறையத் தொடங்கிய நிபா தொற்று; கட்டுப்பாட்டில் தளர்வுகள்! – கேரள அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (10:36 IST)
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.



2018ம் ஆண்டில் கேரளாவையே உலுக்கிய வைரஸ் நிபா. சமீபத்தில் மீண்டும் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கோழிக்கோட்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதுடன் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

சுகாதாரத் துறை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட 9 பஞ்சாயத்துகளில் அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.

மேலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகளில் கடைகள், சந்தைகள் இரவு 8 மணி வரையிலும், வங்கிகள், அரசு அலுவலகங்கள் மதியம் 2 மணி வரையிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments