Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவை அடுத்து கர்நாடகத்திலும் இரவு நேர ஊரடங்கா? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (06:43 IST)
இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலமான மகாராஷ்டிராவில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இரவு 8 மணி முதல் காலை 7 மணிவரை அம்மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் நேற்று ஒரே நாளில் அம்மாநிலத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து  முதல்வர் எடியூரப்பா இன்று முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின் இரவு நேர ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நேற்று கர்நாடகாவில் சுமார் 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments