Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டில் பிறந்த முதல் குழந்தை: இந்திய குழந்தைகள் செய்த சாதனை!

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (08:59 IST)
நேற்று 2019ஆம் ஆண்டு விடைபெற்று 2020ஆம் ஆண்டு பிறந்த புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் சிறப்பான வகையில் கொண்டாடப்பட்ட நிலையில் நேற்றைய புத்தாண்டு தினத்தில் பிறந்த முதல் குழந்தை மற்றும் கடைசி குழந்தை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது
 
நேற்று புத்தாண்டு பிறந்த 12 மணியை அடுத்து ஒரு சில நொடிகளில் பிஜித் தீவில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையே இந்த ஆண்டின் முதல் குழந்தையாக யூனிசெப் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் அமெரிக்காவில் பிறந்த ஒரு குழந்தை நேற்று புத்தாண்டு முடிவதற்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்பு பிறந்துள்ளதாகவும் அந்த குழந்தையே புத்தகத்தின் கடைசி குழந்தை என்றும் அதே அமைப்பு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் நேற்று பிறந்த லட்சக்கணக்கான குழந்தைகளில் 17 சதவீதம் குழந்தைகள் இந்தியாவில் பிறந்து உள்ளது என்பதால் இந்திய குழந்தைகள் இதிலும் ஒரு சாதனை படைத்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது 
 
நேற்றைய புத்தாண்டில் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு குழந்தைகள் பிறந்தது என்பது குறித்த தகவலை யூனிசெப் சற்றுமுன் அறிவித்துள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு
 
இந்தியா — 67,385.
சீனா — 46,299.
நைஜீரியா — 26,039.
பாகிஸ்தான் — 16,787.
இந்தோனேஷியா — 13,020.
அமெரிக்கா — 10,452.
காங்கோ — 10,247.
எத்தியோப்பியா — 8,493

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments