Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொற்கோவிலில் பாத்திரங்களை கழுவிய அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (02:51 IST)
சீக்கியர்களின் புனித நூலை ஆம் ஆத்மி கட்சியினர் அவமதித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, புதுடெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பொற்கோவிலில் பாத்திரங்களை கழுவினார்.
 

 
ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மாதம் சீக்கியர்களின் வழிபாட்டு தளமான பொற்கோவிலில் வழிபட்டு, ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
 
தேர்தல் அறிக்கையில் முதல் பக்கத்தில், பொற்கோவில் பக்கத்தில், கட்சி சின்னமான துடைப்பம் இருந்தது. இதனால் பலத்த சர்ச்சை எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கிய அமைப்புகள் போராட்டம் நடத்தின.
 
இந்நிலையில், திங்களன்று பொற்கோவிலுக்கு வந்த கெஜ்ரிவால், இளைஞரணி செயலாளர் ஆசிஷ்கேத்தன், பஞ்சாப் மாநில தலைவர் சஞ்சய் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பாத்திரங்களை கழுவினர். தொடர்ந்து பக்தர்களுக்கு உணவு பரிமாறினர். அதன்பின், அதிகாலை வழிபாட்டிலும் பங்கேற்றனர். இதன் பின்னர் கிளம்பி சென்றார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments