Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டத்தை கட்டுப்படுத்த சபரிமலை தரிசனத்தில் புதிய மாற்றம்!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (12:06 IST)
சபரிமலை கோயிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தினசரி பக்தர்களின் எண்ணிக்கையை 90,000 ஆக குறைக்கவும் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்கவும் முடிவு செய்தது.

அதன்படி முதல் பாதியில் அதிகாலை 3 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரண்டாவது பாதியில் மாலை 3 மணி முதல் இரவு 11.30 மணி வரையிலும் தரிசன நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. இருப்பினும் பக்தர்களி வருகையால் ஏற்படுகின்ற நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

எனவே சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது. வயது மூத்தோர் மற்றும் சிறுவர் சிறுமிகளின் பாதுகாப்பு கருதி முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தினசரி பக்தர்களின் தரிசன எண்ணிக்கையை 90,000க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று காவல்துறை தேவசம்போர்டுக்கு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments