Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் தரலைனா இப்படிதான் பண்ணுவோம்! – ட்ரெண்டாகும் #BanTikTokInIndia

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (10:43 IST)
சீனாவிடமிருந்து மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ உபகரனங்கள் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் டிக்டாக்கை மொபைலில் இருந்து நீக்கி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பித்துள்ள இந்திய அரசு, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் முகக்கவசம், கவ்ச உடை உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை வாங்க முயற்சித்து வருகிறது. உள்நாட்டில் சில மருத்துவ உபகரணங்கள் முடிந்தளவு தயார் செய்யப்பட்டாலும், முகக்கவசங்கள் உள்ளிட்டவை அதிகமாக தேவைப்படுவதால் சீனா மற்றும் தென்கொரியாவிடமிருந்து அவற்றை இந்தியா வாங்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்நாட்டிலிருந்து மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதில் காலதாமதமும், சிக்கலும் நீடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் கோபமடைந்த இந்திய மக்கள் சிலர் சீன அப்ளிகேசனான டிக்டாக்கை தங்கள் மொபைல்களில் இருந்து நீக்கும் போராட்டத்தை ட்விட்டர் வாயிலாக மேற்கொண்டுள்ளனர். #BanTikTokInIndia என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments