40 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் மாயம்! – ட்ரெண்டாகும் The Gujarat Story!

Webdunia
ஞாயிறு, 7 மே 2023 (16:41 IST)
குஜராத் மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் இருந்து பெண்கள் மதம் மாற்றப்பட்டு கடத்தப்படும் சம்பவம் குறித்து சமீபத்தில் வெளியான தி கேரளா ஃபைல்ஸ் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த தகவலின்படி, குஜராத் மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டிற்குள் மட்டும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2016ல் 7,105 பெண்களும், 2017ல் 7,712 பெண்களும், 2018ல் 9,246 பெண்களும், 2019ல் அதிகபட்சமாக 9,268 பெண்களும், 2020ல் 8,290 பெண்களும் மாயமானதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

மாயமான பெண்களின் நிலைமை என்ன என கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் The Gujarat Story என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments