Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலாம் இறுதி சடங்குகளில் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

Webdunia
வியாழன், 30 ஜூலை 2015 (00:15 IST)
கலாம் இறுதி சடங்குகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

 
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் விஷன் 20 கனவு நிறைவேற, நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
 
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உடல், டில்லியிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த போது. ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், கவர்னர் ரோசைய்யா தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் அவரது உடலை பெற்றுக் கொண்டனர்.
 
அதற்கு முன்னதாக, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், முன்னாள் குடியரசு தலைவர் கலாமின் இறுதிச் சடங்குகள், முழு அரசு மரியாதையுடன் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் கனவு திட்டமான விஷன் 20 நிறைவேற்றுவோம் என்றார்.
 
பின்பு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  மேகாலயா கவர்னர் சண்முகநாதன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்றார். 
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments