Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானப் பணிப்பெண்களிடம் சில்மிஷம் - தொழிலதிபர் கைது

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (12:13 IST)
பறக்கும் விமானத்தில் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் குப்தா(23) என்ற தொழிலதிபர் கடந்த 25ம் தேதி நாக்பூரில் இருந்து மும்பைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. 
 
அந்நிலையில், விமானத்தில் இருந்த பணிப்பெண்கள் 2 பேரின் கையை பிடித்து இழுத்து அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, அந்த பணிப்பெண்கள் இருவரும் கடிதம் மூலம் விமானத்தின் கேப்டனுக்கு புகார் தெரிவித்தனர். அவர் உடனடியாக மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்தார்.
 
அவர்கள் இந்த புகாரை நாக்பூரில் உள்ள சோனெகான் காவல் துறையினருக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் விரைந்து சென்று, ஆகாஷ் குப்தாவை கைது செய்தனர். அதன்பின், அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்