Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகலாந்தில் நாய் இறைச்சி விற்பனைக்கு அனுமதி! – நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2020 (14:37 IST)
நாகலாந்தில் நாய் இறைச்சி விற்பனைக்கு அரசு தடை விதித்திருந்த நிலையில் அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகலாந்தில் பல இடங்களில் நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நாய் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டுமென பலர் கோரிக்கை வைத்த நிலையில் நாகலாந்து அரசு நாய் இறைச்சிக்கு தடை விதித்தது.

அரசின் இந்த தடைக்கு எதிராக நாய் இறைச்சி விற்பனையாளர்கள் நாகலாந்து நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையில் தேவையான ஆவணங்களை ஒப்படைக்க நாகலாந்து அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட அவகாசத்திற்குள் ஆவணங்கள் வழங்கப்படாததால் அரசின் தடைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதனால் தற்போது நாகலாந்தில் நாய் இறைச்சி விற்பனை மற்றும் இறக்குமதி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments