Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”எனது இரண்டாவது இன்னிங்ஸ் திருப்திகரமாக உள்ளது” - சச்சின் டெண்டுல்கர்

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2014 (11:43 IST)
எனது இரண்டாவது இன்னிங்ஸ் எதிர்பாத்ததைவிட திருப்திகரமாக உள்ளது என முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
 
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ”எனது இரண்டாவது இன்னிங்ஸ் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது. பல கிராமங்களுக்கு மின்சார வசதி கிடையாது. சூரியன் மறைவிற்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கை செயலற்றுவிடுகிறது. இந்த ஒரு விஷயத்தை நான் மாற்ற விரும்புகிறேன்.
 
இதை சரிசெய்ய வேண்டுமென்றால் அதற்கு நிறைய பேரின் ஆதரவு தேவை. ஒவ்வொருவரின் ஆதரவையும் பெறமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அவர் கூறினார்.
 
அதிக உலகக் கோப்பையில் விளையாடியுள்ள சச்சின் வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள போட்டி குறித்து கூறுகையில், “நான் விளையாடாத போது, பயிற்சியளிக்க விரும்பவில்லை. ஆனால் நான் கவனித்துக் கொண்டிருப்பேன். நமக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக உறுதியாக நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Show comments