Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை வரலாறு காணாத உச்சம்: சென்செக்ஸ் 50 ஆயிரத்தை நெருங்குகிறது

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (11:06 IST)
கடந்த சில நாட்களாகவே மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 50 ஆயிரத்தை நெருங்கி  வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
அமெரிக்க அதிபராக ஜோபைடன் தேர்வு செய்யப்பட்டது மற்றும் உலகமெங்கும் பொருளாதாரம் மீண்டு வருவது ஆகியவை காரணமாக பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டு வருகிறது 
 
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை தொடங்கியபோதே 49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சென்செக்ஸ் புதிய உச்சம் பெற்றுள்ளது. மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 49,265 என்ற அளவில் தற்போது வர்த்தகம் நடந்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 483 புள்ளிகள் அதிகரித்து உள்ளது என்பதும் 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 128 புள்ளிகள் உயர்ந்து 14 ஆயிரத்து 475 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் பலமடங்கு லாபம் பெற்று உள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதை பலரும் லாபத்தை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments