Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடைபாதையில் தூங்கியவர்களை அடித்துக் கொன்ற செங்கல் சைக்கோ?? – மும்பையில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (11:22 IST)
மும்பையில் நடைபாதையில் படுத்து தூங்கியவர்களை மர்ம நபர் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பைகுல்லா மார்க்கெட் மற்றும் ஜே.ஜே.அரசு மருத்துவமனை அருகே இருவர் கல்லால் அடிபட்ட நிலையில் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் இரண்டு பேரையும் கல்லால் அடித்துக் கொன்றது ஒரே நபர்தான் என கண்டறிந்துள்ளனர்.

அந்த குறிப்பிட்ட நபரை அங்க அடையாளங்களை கொண்டு தீவிரமாக தேடி வந்த போலீஸார் ஜே.ஜே மேம்பாலத்தின் கீழ் அந்த நபரை கைது செய்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீஸார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments