Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனுக்கு மாதம் 10ஆயிரம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்: மனைவிக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி..!

Mahendran
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (18:56 IST)
உடல் நலமில்லாத கணவருக்கு அவரது மனைவி மாதம் பத்தாயிரம் ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சமீர் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் வருமானம் ஈட்ட முடியவில்லை என்றும் அதனால் தான் மனைவி தனக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார்.
 
 இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் சமீருக்கு அவரது மனைவி மாதம் பத்தாயிரம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து சமீரின் மனைவி மேல்முறையீடு செய்த நிலையில் தன்னுடைய வேலையை தான் ராஜினாமா செய்து விட்டதாகவும் அதனால் தன்னால் ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என்றும் வாதிட்டார் 
 
ஆனால் அவரது வாதத்தை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம் மாதம் பத்தாயிரம் ரூபாய் கணவனுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்பதை உறுதி செய்தது. வேலையை ராஜினாமா செய்த போதிலும் அவருக்கு வருமானம் இருப்பது உறுதி செய்துள்ளதால் வருமானம் இல்லாத கணவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments