Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (18:31 IST)
முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியீடு இருப்பதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
 
இந்த நிலையில் சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை மையத்தில் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் அவரை கண்காணித்து வருவதாகவும் அறிவித்துள்ளது
 
இந்த தகவல் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments