Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 15 வயது மகனை கொன்ற கொடூர தாய்

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (10:33 IST)
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தன்னுடைய பதினைந்து வயது மகனை அவனின் தாயே கொன்று வீட்டிற்குள்ளேயே புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜெ.ஜெ காலணியை சேர்ந்தவர் வரிதா(40). அவர் தன்னுடைய கணவனை விவாகரத்து செய்துவிட்டு அவரின் தந்தை ஜோசப் ஜான் வீட்டில் வசித்து வருகிறார். வரிதாவுக்கு நிக்கோலஸ்(15) என்ற மகன் இருக்கிறான்.

 
கடந்த செப்டம்பர் மாதம் வரிதா திடீரென காணமல் போனார். அதன் பின் ஒரு மாதம் கழித்து நிக்கோலஸ் தன்னுடைய தாத்தைவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளான். அதில் அவர்கள் புனேவில் இருப்பதாகவும், தனது தாய் வரிதா வேறொரு ஆணுடன் வசித்து வருவதாகவும் கூறியுள்ளான். மேலும், தனக்கு தன்னுடைய தாயின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றும் தன்னை டெல்லிக்கே அழைத்து சென்றுவிடும்படி தாத்தாவிடம் கூறியுள்ளான்.
 
நிக்கோலஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே, செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் பின் அந்த போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. 
 
இதனிடையில், கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வரிதா தன்னுடைய தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன் யூனிஸ்கான் என்பவர் இருந்துள்ளார். அவரின் தந்தை ஜோசப் ஜான், நிக்கோலஸை பற்றி விசாரித்த போது, அவன் தற்கொலை செய்து கொண்டதாக வரிதா கூறியுள்ளார். தன் மகளும், அவரின் காதலனும் சேர்ந்து தன் பேரனை ஏதோ செய்து விட்டார்கள் என்பதை புரிந்து கொண்ட ஜோசப் ஜான் போலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
 
இது தெரிந்து கொண்ட வரிதா, தன்னுடைய காதலனுடன் தலைமறைவானார். போலிசார் விசாரணையில் இறங்கினார்கள். நிக்கோலஸ் கடைசியாக தனது தாத்தாவிடம் செல்போனில், புனேவில் எந்த இடத்திலிருந்து பேசினான் என்பதை செல்போன் அலைவரிசை மூலம் கண்டுபிடித்தனர். 
 
உடனே போலிசார் புனேவில் நிக்கோலஸ் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் வீடு பூட்டியிருந்தது. வீட்டு உரிமையாளரிடம் விசாரித்த போது  வரிதாவும் யூனிஸ்கானும் கணவன் மனைவி என்று கூறி வீடு வாடகைக்கு எடுத்ததாகவும், அதன்பின் டெல்லிக்கு ஒரு வேலையாக போகிறோம் என்று கூறிச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை என்று கூறியுள்ளார்.
 
இதையடுத்து போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது விட்டின் படுக்கையறையில், தரையில் புதிதாக மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. அதைக்கண்டு சந்தேகம் அடைத்த போலிசார் அந்த கற்களை தோண்டி பார்த்தனர். அங்கு நிக்கோலஸ் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளான்.
 
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், அவரின் தாய் வரிதாவும் அவரின் கள்ளக்காதலன் யூனிஸ்கானும் சேர்ந்து நிக்கோலஸ் கொலை செய்து, வீட்டிற்குள்ளேயே புதைத்து விட்டு சென்றிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. 
 
இதையடுத்து தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் போலிசார் தேடி வருகிறார்கள்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments