Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசர்வ் வங்கி பெயரில் பண மோசடி கும்பல்: ரகுராம் ராஜன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ரிசர்வ் வங்கி பெயரில் பண மோசடி கும்பல்: ரகுராம் ராஜன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (12:14 IST)
ரிசர்வ் வங்கியின் பெயரில் பண மோசடி கும்பல் போலி இ-மெயில் அனுப்பினால் அதை நம்பி ஏமாற வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


 

 
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இது குறித்து கூறுகையில், "ரிசர்வ் வங்கி சார்பில் பணம் செலுத்துமாறு ஒருபோதும் இ-மெயில் அனுப்பப்படுவதில்லை.
 
ரிசர்வ் வங்கி மூலம் பல கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு பண பரிவர்த்தனை நடைபெறுகிறது.
 
மேலும் ரூ.8 லட்சம் கோடி அரசு பத்திரங்கள் எங்களிடம் உள்ளன. எனவே எங்களுக்கு உங்களது பணம் தேவையில்லை.
 
போலி இ-மெயில்களை நம்பி மோசடி பேர்வழிகளுக்கு இரையாகி விடாதீர்கள். மேலும், லாட்டரியில் உங்களுக்கு பணம் கிடைத்துள்ளது.
 
நாங்கள் ரூ.50 லட்சம் அனுப்பி வைக்கிறோம், பணபரிவர்த்தனை கட்டணமாக ரூ.20 ஆயிரத்தை அனுப்பி வையுங்கள் என்று இ-மெயில் வந்தால், நீங்கள் அதனை கண்டுகொள்ளாதீர்கள்.
 
அவை மோசடி செய்பவர்களின் வேலை. ரிசர்வ் வங்கி சார்பில் நாங்கள் ஒரு போதும் உங்களிடம் பணம் கேட்கவும் மாட்டோம்" " என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments