Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதமாக ரகசிய திட்டம் தீட்டிய மோடி குழு

6 மாதமாக ரகசிய திட்டம் தீட்டிய மோடி குழு

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (12:48 IST)
நேற்று இரவு முதல் மக்கள் கையில் இருக்கும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்துள்ளார்.


 

 
மேலும், அந்த நோட்டுகளை வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள், வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இது தொடர்பான நடவடிக்கைகளை, மத்திய அரசு கடந்த ஆறு மாதங்களாக திட்டமிட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் நிதி அமைச்சக மூத்த அதிகாரி ஆகிய 4 பேரும் ரகசியமாக இந்த திட்டம் குறித்து விவாதித்து வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
அதாவது அவர்கள் 4 பேருக்கு மட்டுமே இந்த திட்டம் பற்றி தெரியும்.  கடந்த 6 மாதங்களாகவே புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது பற்றி ஆலோசித்து, அந்த வேலையும் முடிக்கப்பட்டது.
 
முதல் கட்டமாக புதிய 100 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. அதேபோல் அதிநவீன பாதுகாப்பு தொழில் நுட்பத்துடன் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. 
 
அதன் பிறகுதான் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments