Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் விவகாரம்: ரஷ்ய அதிபருக்கு ஆலோசனை கூறிய பிரதமர் மோடி

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (07:50 IST)
உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில ஆலோசனைகளை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி இதில் தலையிட்டு ரஷ்ய அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. 
 
இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான வேறுபாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்
 
பேச்சுவார்த்தை மற்றும் உரையாடலுக்கு உடனடியாக ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்த பிரதமர் மோடி உக்ரைனில் உள்ள இந்திய மக்கள் குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா பெரும் கவலை தெரிவிப்பதாக அதிபரிடம் பிரதமர் மோடி கூறினார்.
 
மேலும் உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக இந்தியர்கள் வெளியேறுவதற்கும் இந்தியா திரும்புவதற்கும் இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக ஆவணங்கள் போதுமானதாக இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

கொடிக்கம்பங்களுக்கு மாத வாடகை.. அரசியல் கூட்டங்களுக்கு கட்டணம்.. நீதிமன்றம் அதிரடி..!

திருமாவளவன் - வைகை செல்வன் திடீர் சந்திப்பு.. அதிமுக கூட்டணிக்கு செல்கிறதா விசிக?

ஜூன், ஜூலை தான் கோடை காலமா? படிப்படியாக வெப்பம் உயரும் என வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments