Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2500 ஏக்கரில் சபரிமலையில் விமான நிலையம்.. பிரதமர் மோடி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (18:37 IST)
2500 ஏக்கரில் சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
 
சபரிமலையில் விமான நிலையம் அமைவது ஆன்மீக சுற்றுலாவுக்கு மிகப்பெரிய செய்தி என்றும் அவர் அந்த டுவிட்டில் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். 
 
இந்த நிலையில் சபரிமலையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் கேரள மாநிலம் சபரிமலை அருகே 2500 ஏக்கர் பரப்பளவில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments