Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் பிரதமராவதற்கு காரணமாயிருந்தவர் அம்பேத்கர் - மோடி புகழாரம்

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (11:30 IST)
நான் பிரதமராவதற்கு காரணமாயிருந்தவர் அம்பேத்கர்தான். அவர் இல்லாவிட்டால் நான் எங்கு இருந்திருப்பேன் என்று தெரியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சர்வதேச மையத்தின் அடிக்கல் நாட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டி வைத்தார். அப்போது பேசிய மோடி அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டினார்.
 

 
இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “அம்பேத்கர், சமூகத்தை இணைப்பதில் நம்பிக்கை கொண்டவர். பிரிப்பதில் அல்ல. அவர்தான் எனக்கு உந்து சக்தியாக திகழ்ந்தார். நான் பிரதமர் ஆவதற்கு காரணமாக இருந்தார். அவரால்தான் அரசியலில் இன்றைய உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன்.
 
அம்பேத்கர் இல்லாவிட்டால், நான் எங்கு இருந்திருப்பேன் என்று நினைத்துப் பார்த்துக்கொள்வேன். அவரை தலித்துக்களின் தலைவர் என்று சொல்வதை கேட்கும்போதெல்லாம் எனக்கு வேதனையாக இருக்கும். அவர் தலித்துகளின் தலைவர் அல்ல, மனித இனத்தின் தலைவர். 
 
அம்பேத்கர், உயிருடன் இருந்தபோது, சமூக தீண்டாமையையும், மறைந்த பிறகு அரசியல் தீண்டாமையையும் சந்தித்தார். ஆனால், அவர் படைத்த அரசியல் சட்டத்தில் தனது பாதிப்புகளை அவர் இடம்பெறச் செய்யவில்லை. அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை கீற்றாக திகழ்ந்தார்” என்றார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments