Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வாக்குறுதியளித்த மோடி: சுரேஷ் தாஸ்

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2015 (17:57 IST)
இன்னும் இரண்டு ஆண்டுகளில் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கான முயற்சிகளை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தங்களுக்கு வாக்களித்ததாக அகில பாரத திகம்பர என்ற இந்து அமைப்பின் தலைவர் சுரேஷ் தாஸ் தெரிவித்துள்ளார்.

அகில பாரத திகம்பர என்ற இந்து அமைப்பின் தலைவர் சுரேஷ் தாஸ், அளித்த பேட்டி ஒன்றில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்தப்பட்ட விவாதங்களில், அவர் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சிகளை செய்வதாக வாக்களித்துள்ளார்.

மேலும் ஒருவேளை, பிரதமர் 2 ஆண்டுகளுக்குள் ராமர் கோவிலை கட்டும் முயற்சிகளை செய்யாவிட்டால், நாங்கள் எங்கள் போராட்டம் மூலமாக அதை செய்து முடிப்போம் என எச்சரிக்கை விடுத்த அவர் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தங்களுக்கு ஆதரவாக உள்ளது என்றும் கூறினார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments