Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் இன்று முதல் இண்டர்நெட் சேவை தொடக்கம்..

Arun Prasath
சனி, 25 ஜனவரி 2020 (16:40 IST)
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இணையத்தள சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்து மாதம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவிய நிலையில் இண்டர்நெட் சேவை, மொபைல் சேவை, ஆகியவை துண்டிக்கப்பட்டன. மேலும் வீதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், ராம்பன், கிஷ்த்லார், தோடா ஆகிய இடங்களில் மெல்ல மெல்ல இணையத்தள சேவை முடக்கம் தளர்த்தப்பட்டது. எனினும் மொபைல், இணையத்தள சேவை முடக்கம் பல மாவட்டங்களில் தொடர்ந்தது.

சமீபத்தில் குப்வாரா, பாரமுல்லா, ஆகிய பகுதிகளில் 2ஜி மொபைல் இண்டர்நெட் சேவை வழங்கப்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் முழுவதும் இணையத்தள சேவை வழங்ப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் காஷ்மீர் முழுவதும் இன்று முதல் 2ஜி மொபைல் இணைய சேவை மீண்டும் வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை செயலாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments