Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏ வை பண மழையால் குளிப்பாட்டிய அவரது ஆதரவாளர்கள்

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (14:50 IST)
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு அவரது ஆதரவாளர்கள் பண மழையில் வரவேற்பளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடக மாநிலம் பிதார் தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ. அஷோக் கின்னி மானாலி. இவர் காங்கிரஸ் கட்சியயைச் சேர்ந்தவர். எம்.எல்.ஏ வான அஷோக் பிதாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். 
 
விழாவிற்கு சென்ற அஷோக்கின் மீது, ஆதரவாளர் ஒருவர்  கட்டுக்கட்டாக பணத்தை வீசி வரவேற்றார். அவர் தன்மீது விழுந்த பணத்தை கிராம மக்களை நோக்கி எறிந்தார். சுத்தி இருந்த மக்கள் அவர் வீசிய பணத்தை எடுக்க ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். இதனால் சற்று நேரம் அங்கு அசாதாரண சூழல் உருவாகியது. எம்.எல்.ஏ வின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு எதிர்கட்சி தலைவர்கள் தங்களது கண்டணங்களை பதிவிட்டு வருகின்றனர்.
 
மக்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு, இதுபோன்ற மட்டமான செயல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குறியது என்று சமூக ஆர்வலர்கள் பலர் தெரிவித்துள்ளனர். தற்பொழுது வரை அமைச்சர் சார்பில் இருந்து எந்த ஒரு மன்னிப்பும் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments