Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: தண்டவாளத்தில் வீசிய கொடூரர்கள்

Webdunia
வியாழன், 26 மே 2016 (12:28 IST)
நாட்டின் தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதே போல் ஒரு சம்பவம் மீண்டும் டெல்லியில் நடந்துள்ளது.


 
 
13 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரயிலில் இருந்து சிறுமி வீசப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 17-ஆம் தேதி காணாமல் போன அந்த சிறுமி உடலில் பலத்த காயங்களுடன் புல் பிரகலாத்பூர் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த சிறுமி பல நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மனநிலை பாதிகப்பட்டவர் என கூறப்படுகிறது.
 
பதிக்கப்பட்ட அந்த சிறுமி சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றத்தில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டுபிடித்து தண்டனை வழங்க காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்