Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஸ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி...

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (21:15 IST)
கடந்த சில நாட்களாகவே தீவிரவாதிகள் இந்தியா பாகிஸ்தான்  எல்லைக்குள் புகுந்து  துப்பாக்கிச்சூடு நடத்துவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர் . இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியா கடந்த முறைபோன்று சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு வருவதாகவும் இந்திய ராணுவ தளபதி கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜம்மூ - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், தீவிரவாதிகள் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு கட்சியைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க பயங்கரவாதிகளே, இந்த கொடூர தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ல நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments