மேற்கு வங்க மாநிலம் பஹரம்பூர் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் மனநலம் குன்றிய ஆண் மற்றும் பெண் நோயாளிகள், நிர்வாண கோலத்தில் படுத்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரச சார்பற்ற அமைப்பை சேர்ந்த அஞ்சலி என்ற பெண் அந்த மருத்துவமனையை பார்வையிட்ட போது, இந்த அவலநிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது குறித்து, அவர் கூறியதாவது, “மருத்துவமனையில் நான் நுழைந்த போது, ஆண் மற்றும், பெண் நோயாளிகள், நிர்வாண கோலத்தில் படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அவர்களுக்கு தனி கழிப்பறை இல்லை. அதனால், அவர்கள், நீண்ட நாட்களாக குளிக்காமல் இருக்கின்றனர்.
மேலும் தங்கள் உடல் உபாதைகளை தங்கள் படுகையிலேயே கழிக்கின்றனர். அதனால், அவர்களுக்கு பல தொற்று நோய் வருகிறது. இது குறித்து, நான் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் கேட்ட போது, அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.”என்றார்.
இது தொடர்பாக பதில் அளிக்க, தேசிய மனித உரிமைகள் ஆணையம், மேற்கு வங்க அரசிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.