Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாண நிலையில் நோயாளிகள்: கண்டுகொள்ளாத அரசாங்கம்

நிர்வாண நிலையில் நோயாளிகள்: கண்டுகொள்ளாத அரசாங்கம்

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (12:33 IST)
மேற்கு வங்க மாநிலம் பஹரம்பூர் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் மனநலம் குன்றிய ஆண் மற்றும் பெண் நோயாளிகள், நிர்வாண கோலத்தில் படுத்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


அரச சார்பற்ற அமைப்பை சேர்ந்த அஞ்சலி என்ற பெண் அந்த மருத்துவமனையை பார்வையிட்ட போது, இந்த அவலநிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து, அவர் கூறியதாவது, “மருத்துவமனையில் நான் நுழைந்த போது, ஆண் மற்றும், பெண் நோயாளிகள், நிர்வாண கோலத்தில் படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அவர்களுக்கு தனி கழிப்பறை இல்லை. அதனால், அவர்கள், நீண்ட நாட்களாக குளிக்காமல் இருக்கின்றனர்.

மேலும் தங்கள் உடல் உபாதைகளை தங்கள் படுகையிலேயே கழிக்கின்றனர். அதனால், அவர்களுக்கு பல தொற்று நோய் வருகிறது. இது குறித்து, நான் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் கேட்ட போது, அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.”என்றார்.

இது தொடர்பாக பதில் அளிக்க, தேசிய மனித உரிமைகள் ஆணையம், மேற்கு வங்க அரசிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments