Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல பயங்கரவாதி சுட்டுக்கொலை; முதல்வர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (08:20 IST)
மேகாலயாவில் பிரபல பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறை எடுத்த நடவடிக்கையில் பயங்கரவாதியாக அறியப்பட்ட செரிஸ்டர்பீல்டு தாங்யூ என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து மேகாலயாவின் 4 மாவட்டங்களில் பெரும் கலவடம் மூண்டுள்ளது. இந்த வன்முறை சம்பவங்களை முன்வைத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ள அம்மாநில உள்துறை அமைச்சர், செரிஸ்டர்பீல்டு கொல்லப்பட்டது குறித்த வெளிப்படையான விசாரணை தேவைப்படுவதாக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முதல்வர் கன்ராட் சங்மாவின் இல்லத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பறக்கும் விமானத்தில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்.. சக பயணிகள் அதிர்ச்சி..!

கல் உடைக்கும் தொழிலாளி பலியான வழக்கு: திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி விடுதலை ரத்து..!

சந்தானபாரதி புகைப்படம் இடம்பெற்றிருந்தது திமுகவின் வேலை: அண்ணாமலை

வரும் ஞாயிறன்று காலை முதல் மாலை வரை புறநகர் ரயில் சேவை ரத்து.. என்ன காரணம்?

நீ என்ன பண்றேன்னு தெரியாதுன்னு நினைச்சியா? தொலைச்சிடுவேன் உன்ன!? - ஓபன் ஸ்டேஜில் மிரட்டல் விடுத்த ராஜேந்திர பாலாஜி!

அடுத்த கட்டுரையில்
Show comments