Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் - இது மணிப்பூரில்

Webdunia
வெள்ளி, 29 மே 2015 (02:17 IST)
மணிப்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
 
மணிப்பூரில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், சட்ட மன்ற உறுப்பினர்களாக  ஜோய்கிஷன், பிஸ்வஜித் சிங் மற்றும் குகோய் சிங் ஆகியோர் இருந்து வந்தனர்.
 
இந்நிலையில், இவர்கள் மூன்று பேரும், அக்கட்சியிலிருந்து விலகி, மணிப்பூர் மாநில திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தோற்றுவிக்கும் வகையில் ரகசிய முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 
இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், சட்ட மன்ற உறுப்பினர்களாக  ஜோய்கிஷன், பிஸ்வஜித் சிங் மற்றும் குகோய் சிங் ஆகியோர் மீது, கட்சி தாவல் தடை சட்டத்தின்படி, இம்மூன்று எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து மணிப்பூர் மாநில சட்டசபை சபாநாயகர் லோகேஸ்வர் சிங் உத்தரவிட்டு உள்ளார்.

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments