Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூர் கலவரம் : 10 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம்

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (20:15 IST)
மணிப்பூர் மாநிலத்தில் 50 நாட்களாகத் தொடர்ந்து  இரு பிரிவினருக்கு இடையே போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்  இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டுமென்று 10 எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

மணிப்பூர் மாநிலத்தில்  இரு பிரிவினருக்கு இடையே  கடந்த மாதம் 3 ஆம் தேதி கலவரம் மூண்டது. இக்கலவரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், 50 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.

இந்தக் கலவரத்தில்  100க்கும் மேற்பட்ட  மக்கள் உயிரிழந்துள்ளதாகவும்  நூற்றுக்கணக்கானோர்  காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில்  எதிர்க்கட்சியான காங்கிரஸ்  மத்திய பாஜக அரசை குறை கூறி வரும் நிலையில், இன்று காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட 10 முக்கிய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளன.

அதில்,  ''மணிப்பூரில் உள்ள அனைத்து சமுதாய மக்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இவ்விவகாரத்தில்  பிரதமர் மோடி உடனே தலையிட வேண்டும்'' என்று கூறியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments