Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை நிர்வாணமாக இழுத்து சென்று வன்கொடுமை! – குற்றவாளிகளை தேடும் மணிப்பூர் காவல்துறை!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (09:43 IST)
மணிப்பூரில் கலவரம் தொடர்ந்து வரும் நிலையில் இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்து சென்று சிலர் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்த நிலையில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த மே மாதம் தொடங்கிய இந்த வன்முறை 3 மாதங்கள் ஆகியும் முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் பழங்குடியின பெண்கள் இருவரை எதிர் தரப்பு கும்பல் நிர்வாணமாக இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேகசந்திரா சிங் “கடந்த 24 மணி நேரமாக மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. இருப்பினும் சில இடங்களில் துப்பாக்கிச்சூடு, கலவரங்கள் தொடர்கிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை தேடி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்..!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா? பரபரப்பு தகவல்..!

ரியல் எஸ்டேட் போட்டி! கட்டுமான நிறுவனங்கள் சிறப்பு வசதிகளை விளம்பரம் செய்ய தடை!

வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டு.. குரங்குகள் நீதிமன்றம் செல்லலாம்.. சுரேஷ் கோபி சர்ச்சை கருத்து

ராஜஸ்தான் மாநிலம் ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரலுக்குள் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரையில்