Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் கலவரத்தைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை கண்டதும் சுட ஆளுனர் உத்தரவு

Webdunia
வியாழன், 4 மே 2023 (18:40 IST)
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுப்பட்ட  நிலையில் அது வன்முறையாக வெடித்துள்ள நிலையில்,  மாநில ஆளுனர் கலவரத்தைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில்  பிரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறாது. இங்கு, மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடி( எஸ்டி) பிரிவில் சேர்க்க வேண்டும், என்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் ஒற்றுமை ஊர்வலம் நடத்தினர்.

எதிர்பாராத விதமான இந்த ஊர்வலத்தின்போது, வன்முறை வெடித்தது. டோர்பாங் என்ற பகுதியில், பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அங்குள்ள 8 மாவட்டங்களில்  புதன்கிழமையன்று ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.  இணையதளம், மற்றும் மொபைல் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் மற்றும் அசாம்  ரைபிள்ஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அம்மாநில கவர்னர்   கலவரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments