Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குச்சாவடியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2014 (15:45 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு உத்தர பிரதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இளைஞர் ஒருவர் வாக்குச்சாவடியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
நாடாளுமன்ற  தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு உத்தர பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 121 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் உத்தர பிரதேசத்தின் அயோன்லா நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தேவ்சரா ராம் பரோஸ் லால் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஹரி சிங் என்னும் 25 வயது இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். 
 
குடிபோதையில் இருந்ததாக கூறப்படும்  அவர் திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்,  அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  
 

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

Show comments