Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடையாது, 42லும் தனித்து போட்டி: மம்தா பானர்ஜி அதிரடி..!

Mahendran
சனி, 24 பிப்ரவரி 2024 (09:12 IST)
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் சுமூகமாக தொகுதியுடன் செய்து வருவதாக தகவல் வெளியாகிய நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தங்கள் கட்சி போட்டியிட போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சிக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.  
 
ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி என்றும் காங்கிரஸ் உடன் தொகுதி உடன்பாடு இல்லை என்றும் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார் .
 
மம்தா பானர்ஜியின் இந்த அதிரடி அறிவிப்பை அடுத்து காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் சோனியா காந்தி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரஸ் கட்சிக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திடீர் திருப்பமாக மம்தா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேனியில் டெங்கு காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு! - மேலும் 5 சிறுவர்கள் சிகிச்சையில்..!

சென்னை மழையில் மக்கள் தத்தளிப்பு: பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் திமுக! - ஓபிஎஸ் விமர்சனம்!

ஏரியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெள்ளை நிற மாவை தூவியதாக குற்றசாட்டு: நடவடிக்கை எடுக்கப்படும் என -அமைச்சர் தாமோ.அன்பரசன் பதில்!

தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்....

திருப்பதியில் விடிய விடிய மழை: ஏழுமலையான் கோயில் முன்பு வெள்ளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments