Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேர தடையை கண்டித்து தர்ணா போராட்டம்: மம்தாவில் மேற்குவங்கத்தில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (07:11 IST)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் தேர்தல் ஆணையம் தடை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தன்னுடைய தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேற்கு வங்க மாநிலத்தில் 4 கட்ட தேர்தல் முடிந்து விரைவில் ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவு ஒன்றில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிப்பதாக அறிவித்தது.
 
இதனை அடுத்து திரிணாமுல் கட்சி தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். இந்த நிலையில் தனக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதனால் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments