Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சியா?? முதல்வரின் சர்ச்சை பேச்சு

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (08:41 IST)
இந்தியா ஜனாதிபதி ஆட்சி முறையை நோக்கித் தான் செல்கிறது என மேற்கு வங்க முதல்வர் பரபரப்பாக பேசியுள்ளார்.

இந்தியாவில் பிரதமர் தலைமையிலான ஆட்சி முறையே உள்ளது. ஆனால் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஜனாதிபதி ஆட்சி முறையே உள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் ஜனாதிபதி ஆட்சியே இனி வரும் என மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் நிறுவன நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, நாம் ஜனாதிபதி ஆட்சி முறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம், இனி ஒரே தேர்தல், ஒரே அரசியல் கட்சி என்ற நிலை வரும் என கூறியுள்ளார்.

மேலும் பாஜகவை குறித்து, மத்திய அரசின் இனவாத அரசியல் என்னும் போதைக்கு பலரும் இரையாகி வருகிறார்கள். ஆனால் நான் ஒருபோதும் அந்த போதைக்கு இரையாக மாட்டேன், அடிமையும் ஆகமாட்டேன் எனவும் ஆவேசமாக கூறியுள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments