Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆஸ்கர் விருதும் தென்னிந்தியர்களின் உழைப்பு.. மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை: மல்லிகார்ஜுன கார்கே

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (13:25 IST)
இந்தியாவுக்கு கிடைத்த இரண்டு ஆஸ்கார் விருதுகளும் தென்னிந்தியர்களுக்கு கிடைத்த உழைப்பின் பலன் என்றும் அதை மத்திய அரசு தனது பெருமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் பேசி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடி உள்பட பல பாஜகவினர் இந்தியாவுக்கே இது பெருமை என்று தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்கள் அவையில் இது குறித்து பேசிய போது ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தை பிரதமர் மோடி தான் இயக்குனர் என மோடி அரசாங்கம் பெருமை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறினார் 
 
மேலும் இது தென்னிந்தியர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அதில் அவர்கள் தான் அதிகம் பெருமை கொள்வார்கள் என்றும் நானும் பெருமை கொள்வேன் என்றும் தெரிவித்தார். நீங்களும் இதற்காக பெருமை கொள்ளலாம் ஆனால் மத்திய அரசு அதன் பெருமையை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் இது முழுக்க முழுக்க தென் இந்தியர்களுக்கான பெருமை என்றும் அவர் தெரிவித்தார். கார்கேவின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments