Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 4-க்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார்..! அமைச்சர் அமித்ஷா..!!

Senthil Velan
திங்கள், 27 மே 2024 (15:24 IST)
தோல்விக்கு பொறுப்பு ஏற்று, ஜூன் 4ம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
 
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர்,  இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40-ஐ கூட தாண்ட முடியாது என்றும் சமாஜ்வாதி கட்சி 4 இடங்களைத் தாண்டாது என்றும் தெரிவித்தார். 
 
அடுத்த 5 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் பிரதமராக இருப்பார் என்று நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளனர் என்று அமித்ஷா கூறினார்.
 
ஜூன் 4ம் தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியில்லை என குறை கூறுவார் என அவர் தெரிவித்தார். 

ALSO READ: தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.! மழைக்கு வாய்ப்பு இருக்கா..?
 
தோல்விக்கு பொறுப்பு ஏற்று, ஜூன் 4ம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார் என்று அமித்ஷா குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5-பேர் நீரில் மூழ்கி பலி..! பயிற்சியின் போது நிகழ்ந்த பரிதாபம்..!

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி! உக்ரைன் போர் குறித்து புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

திராவிட மாடல் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை.. 2026 தேர்தலில் வெற்றி எங்களுக்கே: முதல்வர் ஸ்டாலின்..!

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments