Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்படி நடந்தால் தூக்கில் தொங்க தயாரா ? – மோடிக்கு மல்லிகார்ஜுனா கார்கே கேள்வி !

Webdunia
திங்கள், 13 மே 2019 (13:42 IST)
காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் வென்று விட்டால் மோடி தூக்கில் தொங்க தயாரா என மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி ‘காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவுக்கு சென்ற தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஆனால் இம்முறை அதைவிடவும் கம்மியான தொகுதிகளில்தான் வெல்லும்’ எனக் கூறிவருகிறார்.

இதனால் கோபமடைந்த காங்கிரஸின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே ‘மோடி எங்கு சென்றாலும் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது எனப் பிரச்சாரம் செய்கிறார். காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளுக்கு மேல் வென்றால் மோடி தூக்கில் தொங்குவாரா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

அவரின் இந்த பேச்சு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. ஒரு மூத்த அரசியல்வாதியிடம் இருந்து இதுபோன்ற கீழ்த்தரமான வார்த்தைகள் வருவது அரசியல் நாகரீகத்துக்கு இழுக்கு எனப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments