Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாத்மா காந்தி பிறந்தநாள்; நினைவிடத்தில் பிரதமர், குடியரசு தலைவர் மரியாதை!

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (09:40 IST)
இன்று அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர், குடியரசு தலைவர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இந்திய சுதந்திர போராட்ட வீரரான மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள காந்தி சிலைகளுக்கு அரசியல் தலைவர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்.

இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் டெல்லி ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் மரியாதை செலுத்தினர். பிறந்த நாளில் மகாத்மா காந்தியின் பஜனை பாடல்களும் பாடப்பட்டது.

நாடு முழுவதும் மகாத்மா காந்தி பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை போட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments