Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடக்கம்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பால் பரபரப்பு!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (08:26 IST)
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது சில வாரங்களாக குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தினசரி பாதிப்புகள் 300க்கும் கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது 400ஐ தாண்டியுள்ளது. இதனால் மும்பை மேயர் கிஷோரி பட்னேகர், மும்பையில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார். மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும், விநாயகர் சதுர்த்தியை வீட்டிலிருந்தே கொண்டாடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முதல் இரண்டு அலைகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளான மகாராஷ்டிராவிலேயே மூன்றாவது அலையும் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசின் NCERT பாடப்புத்தகத்தில் முகலாய வரலாறு முற்றிலும் நீக்கம்!

இந்திய ராணுவத்திற்கு நன்கொடை கேட்டு மோசடி குறுஞ்செய்தி! போலிகளை நம்ப வேண்டாம்! - இந்திய ராணுவம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments