Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் பரிசு ரூ.50 லட்சம்.. ஆறுதல் பரிசும் உண்டு! – கிராம நிர்வாகங்களுக்கு கொரோனா தடுப்பு போட்டி!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (11:42 IST)
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால் கொரோனாவை குறைக்கும் கிராமங்களுக்கு பணப்பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கையை பொறுத்து மாநிலங்கள் முழு ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இரண்டாவது அலையில் கிராமங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிராமங்களில் முறையாக சுகாதார வசதி இல்லாத நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் கிராமங்களுக்கு முதல் பரிசாக ரூ.50 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.25 லட்சமும் மற்றும் சில ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுகள் பணமாக அல்லாமல் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்படும் என்றும், இந்த போட்டியில் 22 வரைமுறைகள் கடைபிடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments