Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை உயர்ந்த சமோசா; கடுப்பான சமோசா பிரியர் தீக்குளிப்பு! – மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (10:05 IST)
மத்திய பிரதேசத்தில் சமோசா அதிக விலைக்கு விற்றதால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் நகரை சேர்ந்தவர் பஜ்ரு ஜெய்ஸ்வால். சமீபத்தில் இவர் தனது இரு நண்பர்களுடன் அருகில் உள்ள ஒரு கடையில் சமோசா சாப்பிட்டுள்ளார். பணம் கொடுத்தபோது சமோசா விலை உயர்ந்து விட்டதாக கூறிய கடைக்காரர் கஞ்சன் சாகு 2 சமோசா ரூ.15க்கு பதிலாக ரூ.20 ஆக விலை சொல்லியுள்ளார்.

இதுகுறித்து கடைக்காரருக்கும், பஜ்ருவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடைக்காரர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் பஜ்ருவை விசாரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் மறுநாள் மீண்டும் கடைக்காரரிடம் சென்று வாக்குவாதம் செய்த பஜ்ரு எதிர்பாராத நேரத்தில் பெட்ரோலை ஊற்றி கொளுத்திக் கொண்டுள்ளார்.

உடனடியாக தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சமோசாவால் ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments