Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அலுவலகங்களில் பசு கோமிய பினாயில்தான் யூஸ் பண்ணனும்! – மத்திய பிரதேச அரசு உத்தரவு!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:30 IST)
மத்திய பிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் இனி பசு கோமிய பினாயில்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் பசு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று. கடந்த 2017ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் முதல் பசு சரணாலயம் அமைக்கப்பட்ட நிலையில் பின்னர் பல்வேறு காரணங்களால் அவை தனியார்மயமாக்கப்பட்டன.

இந்நிலையில் பசுவை பாதுகாக்கவும், பசு சார்ந்த பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும் மத்திய பிரதேச அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதல் நடவடிக்கையாக மத்திய பிரதேசத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பசு கோமிய பினாயில் தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவு வெளியாகியுள்ளது.

இதன்மூலம் பசு சார்ந்த பொருட்கள் விற்பனை அதிகரிக்கும் என்பதோடு, பசுக்களை பாதுகாக்கவும் இந்த முயற்சிகள் உதவும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

9 கிலோ சங்கிலி அணிந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்த நபர்.. காந்தத்தால் இழுத்து பரிதாப பலி..!

லிவ் -இன் உறவில் வாழ்ந்து வந்த பெண் உதவி காவல் ஆய்வாளர் கொலை.. CRPF வீரர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments