Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா?

Mahendran
திங்கள், 9 செப்டம்பர் 2024 (10:18 IST)
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருப்பதை அடுத்து தமிழகத்திற்கு மழை பெய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. இது வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த நிலையில் தற்போது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு இடையே நிலை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை அல்லது இரவு இந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடற்கரையில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து புரி மற்றும் திகா கடற்கரை இடையே கரையை கடக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் அடுத்துள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments