Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி வாய்ப்பில் 6 சுயேட்சை வேட்பாளர்கள்.. இப்பவே தூண்டில் போட தொடங்கிய தேசிய கட்சிகள்!

Prasanth Karthick
செவ்வாய், 4 ஜூன் 2024 (15:52 IST)
மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள 6 சுயேட்சை வேட்பாளர்கள் பக்கம் தேசிய கட்சிகளின் கவனம் திரும்பியுள்ளது.



இந்தியா முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 295 இடங்களில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸின் இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னணியில் உள்ளது. பிற கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த தேர்தலில் தற்போதைய நிலவரப்படி தேசிய கட்சி வேட்பாளர்களையும் தாண்டி 6 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னணி வகிக்கின்றனர். பஞ்சாபில் இரண்டு பேர் முன்னணியில் உள்ளனர். இதுதவிர மகாராஷ்டிரா, டையூ டாமன், காஷ்மீரிலும் சுயேட்சையாக சிலர் முன்னணியில் உள்ளனர்.

இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர்களிடம் இப்போதே பெரிய டீல்களை அரசியல் கட்சிகள் பேசத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் பெரும்பான்மை பெறுவதற்காக வேறு சில கட்சிகளுடன் பேசி வரும் நிலையில், இந்த சுயேட்சைகளையும் ஈர்க்க திட்டமிடுவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments